சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கப்பல்!

0
285

டீசலுடன் சர்வதேச கடற்பரப்பில் காத்திருக்கும் கப்பலானது கட்டணம் செலுத்தப்படும் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்புத் தெரிவித்துள்ளது.

டீசலுடன் சர்வதேச கடற்பரப்பில் கப்பல் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் தான் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளதாகவும்,கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் கட்டணம் செலுத்தப்படும் வரை கேப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.

கப்பலிற்கு கட்டணத்தை செலுத்துவோம் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள போதிலும் ஜனாதிபதியின் உத்தரவாதத்தை கப்பல் கேப்டன் ஏற்க மறுத்துள்ளார்.

தனது கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் அஞ்சுகின்றார், இலங்கையால் கட்டணங்களை செலுத்த முடியாததால் அந்த நிலையேற்படும் என அவர் கருதுகின்றார்.

இதன்படி கட்டணம் தயாராகிவிட்டது என அரசாங்கம் அறிவித்ததும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் என தகவல் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த சில நாட்களிற்கு டீசல் பற்றாக்குறை காணப்படும்.