மக்களுக்கு அஞ்சி அடையாளங்களை அகற்றி வாகனங்களைச் செலுத்தும் அமைச்சர்கள்!

0
269

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாகனங்களில் இருந்த ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ என்ற அடையாளங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பலகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாளம் காணும் வசதிக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டன.

தற்போது நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக மக்கள் வரிசைகளில் நின்று எதிர்ப்பு தெரிவிப்பதால் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.