மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிவாயுவிலை!

0
239

நாட்டில் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏப்ரல் 04 ஆம், 05 ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.