தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை! – கோட்டாபய ராஜபக்ச

0
327

தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை, பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி தேசிய அரசால் தான் நாடு இந்தளவு நெருக்கடியை சந்தித்துள்ளது, இந்நிலையில் மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

எமது அரசு பெரும்பான்மைப் பலத்துடன் இன்னமும் இருக்கின்றது. அரசைக் கவிழ்க்க சதி செய்வோர் தொடர்பில் நாம் கவனம் எடுத்துள்ளோம். அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் முடிவுக்கு வரும் என்று உறுதி வழங்கியுள்ளார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச.