இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!

0
526

இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை நீடிக்க மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.