நாளை துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள இரு நாட்டு அதிபர்கள்!

0
320

இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.

சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரே, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச முடியும் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் பற்றிய தெளிவு கிடைத்தவுடன் சந்திப்பை நடாத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபருடன் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் லாவ்ரோவின் கருத்து காணப்படுகிறது.

தாமதம் இன்றி அமைதி திரும்புவதற்காக, உக்ரைனின் நடுநிலைமை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் ஆலோசனை நடாத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

யுத்த நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான பெலாரசில் இதுவரை நடைபெற்ற 03 கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாளை துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.