நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் காலமானார்

0
357

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ். குப்பிழானை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி 17ம் திகதி தனது 90வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968ம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் வைத்திலிங்கம் துரைசாமி அங்கம் வகித்தவர். வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது