யாழ். நகர் பகுதியில் 38 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0
787

யாழ். நகர் மத்திய பகுதியில் 38 வயதுடைய இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது.

குடும்ப உறவினர்களிடம் கடந்த 19.03 அன்று வேலைக்கு போய் வருவதாக கூறி விட்டு சென்று இரவு வரை வராத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் குடும்ப உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், யாழ். நகர் மத்திய உணவுக்களஞ்சிய பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.