பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்!

0
413

நீண்ட தூரம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பெண்களிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கொழும்பில் இருந்து மலையகம் மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பேருந்துகளில் பெண்களிடம் தவறான நடந்து கொள்ளும் நபர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்துகளில் அங்க சேட்டையில் ஈடுபடும் போது அங்கிருந்து சிலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.