தொடர்ந்து இருளில் மூழ்கப் போகும் இலங்கை!

0
303

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

போதிய எரிபொருள் மற்றும் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்போது ஆறரை மணிநேரமாக நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு அடுத்த வாரத்திற்குள் 10 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொருத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.