துவிச்சக்கர வண்டியும் கனரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலி!

0
550

மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சிவலிங்கம் பவாநந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு பண்ணை வீதி வழியாக வீதி அபிருத்தி வேலைக்காக கல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சந்திவெளி காவல்துறையினர் சென்று விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.