விடுதலைப் புலிகளின் தலைவரால் செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்த கோட்டாபய! பகிரங்க தகவல்

0
296

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிங்களவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்த நாட்டில் காணிகள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தொழிலாளர்கள், தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை.

அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்ற பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை. மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

30 வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை. ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.