மீண்டும் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

0
464

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.