கோவிலுக்கு வருகை தந்தவர் மயங்கிவிழுந்து மரணம்: யாழில் சம்பவம்

0
508

திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதுடைய ஆண் ஒருவர் வழிபாடுகளுக்காக இன்று ஆலயத்துக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினர்.

நோயாளர் காவு வண்டியில் வந்த வைத்தியர், மயங்கி விழுந்த நபரைப் பரிசோதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.