இந்திய பிரதமருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நன்றி தெரிவிப்பு

0
361

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த கடன் உதவி தொடர்பில் நன்றி தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், எதிர்காலத்திலும் இந்திய அரசாங்கம், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் என எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.