நாட்டின் தேசிய சொத்துக்கள் அனைத்தையும்அடகு வைத்துக் கொண்டிருக்கும் அரசு!

0
340

முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்துக் கொண்டிருப்பதாகத் திருகோணமலை ஒன்றிணைந்த வெகுஜன இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் சூரிய மின்கல உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் இல்லத்தில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்தும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

”நாட்டின் தேசிய சொத்துக்கள் அனைத்தும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வாதிகார நாடுகளிடம் அடமானம் வைத்து அபிவிருத்தி என்ற போர்வையில் தமது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அரசாங்கம் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் தேசிய சொத்துக்களான கந்தளாய் சீனி தொழிற்சாலை இந்தியாவிற்கு வழங்கப்படுவதாகவும், சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும், திருகோணமலை இயற்கைத் துறைமுகம் விருத்தி செய்யும் நோக்கில் அதனையும் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.