IPL இல் மும்பை அணியின் தவறு என்ன?.. ராஜ்குமார் ஷர்மாவின் கருத்து

0
445

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு  என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். 

வரும் மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுத்தது. அவர்களை கொண்டு ரோகித் சர்மா சாதிப்பாரா? சறுக்குவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.