யாழில் குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

0
285

யாழில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உப காவல்துறை அத்தியட்சகர் மேனன் தலைமையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3000 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.