உக்ரைன் ரஷ்யா போரில் உஜிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியவில்லை; ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது

0
399

உக்ரைன் – ரஷ்யா இடையே இடம்பெற்றுவரும் போரினால் உக்ரைனில் மார்ச் 18ஆம் திகதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதைவிடவும் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உயிரிழப்புகளைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 25ஆவது நாளாக தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் பலமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும், பீரங்கிகள், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.