பண்டாரகம தனியார் ஆய்வு கூடத்தில் மயங்கி விழுந்த தாதியர்கள்

0
550

பண்டாரகம தனியார் ஆய்வு கூடத்தில் மயங்கி விழுந்த இரண்டு தாதிகளும் மற்றுமொருவரும் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (மார்ச் 17) பிற்பகல் 2.30 மணியளவில் ஆய்வகத்தின் மேல்மாடியில் உள்ள ஆய்வகத்தில் இருந்த ஒருவரும், பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு தாதியர்களும் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரகம காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூவரும் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் பண்டாரகம காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு மாடிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை ஜெனரேட்டர்கள் அமைந்துள்ள அறையில் காற்றோட்ட ஜன்னல்கள் பொருத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஆய்வுகூடம் மற்றும் அதனை ஒட்டியுள்ள அறையை சீல் வைத்து பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளை அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பண்டாரகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.