கொழும்பில் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொடூரமாக கொலை

0
288

கொழும்பு 2, பகுதியில் டவ்சன் வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொடூமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், கொலையுண்டவர் 50 வயதுடைய மொஹமட் சியாப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கொம்பனி வீதியில் வசிப்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.