வெளிநாட்டிலிருந்து நாடு திம்பிய கணவர் வீடு வரவில்லை; மனைவி விடுத்த கோரிக்கை

0
303

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தனது கணவர் பல மாதங்களாகியும், வீடு வரவில்லை என அவரது மனைவி முறப்பட்டு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் எனபவ்ரே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி டி. பொன்மணி, கணவர் காணாமல் போயுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கணேசன் கலைச் செல்வன், கட்டார் நாட்டில் தொழில் செய்து வந்த நிலையில், இலங்கைக்கு வந்த நபர் பல மாதங்களாகியும், இதுவரை வீடு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளிநாட்டுப் பணியகமும், கணேசன் கலைச்செல்வன், இலங்கைக்கு பல மாதங்களுக்கு முன்பே, திரும்பிவிட்டதாகவும், அவர் இலங்கையில் எங்கு இருக்கின்றார் என்பது தமக்கு தெரியாதென்றும் கூறியதாக, அவரது மனைவி குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் காணப்படும் கணேசன் கலைச்செல்வனை அறிந்தவர்கள், கண்டவர்கள் எவருமிருப்பின், அவரது மனைவியான டி. பொன்மலர் என்பவருடன் – 075-3425661 என்ற கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கணேசன் கலைச்செல்வன்