முல்லைத்தீவு மாவட்டத்தில் சமையல் எரிவாயுவிற்காக மக்கள் காத்திருப்பு

0
349

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தனியார் வணிக நிலையங்களில் சமையில் எரிவாயு இல்லாத நிலையில் உணவகங்கள் பல மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதில் உணவு சமைப்பதில் பெற்றோர்கள் பல சிரமங்களுக்கு எதிர்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் தனியார் வணிக நிலையங்களில் சமையல் எரிவாயு பதுக்கப்பட்டு அதிக விலையில் விற்கப்பட்டுள்ள சம்பவமும் கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் வணிக நிலையங்களுக்குச் சமையல் எரிவாயுவினை வழங்காத நிலையில் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இன்று காலை சமையல் எரிவாயு விநியோகத்தர்கள் வாகனத்தில் வந்து மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

ஒருசில கடைகளுக்கு மாத்திரம் அறிவிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை அரித்த பல மக்கள் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள்.

குடும்ப அட்டையினை காண்பித்து ஒரு குடும்பத்திற்கு ஒரு சமையல் எரிவாயு என்ற வீதத்தில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

500 வரையான சமையல் எரிவாயு சிலிண்டர்களே மக்களுக்கு வழங்கப்பட்ட போதும் பலர் எரிவாயு உருளைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.