ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலையானார்

0
349

புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சுமார் 31 ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது.

சிறை வாசலில் தனது மகனின் பிணை குறித்து மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அவரது தாயார் அற்புதம்மாள் பேசும்போது, ‘நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் இந்த பிணை ஒரு இடைக்கால நிவாரணம் மட்டுமே. என் மகன் பேரறிவாளன் உள்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, எங்கள் சட்டப்போராட்டம் தொடரும் என்றார்.

இதையடுத்து புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், அவரது தாயாருடன் காரில் புறப்பட்டு சென்றார்.