சிங்கப்பூர் காவல் துறையினால் இலங்கையருக்கு வழங்கப்பட்ட விருது!

0
408

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நெடுஞ்சாலைகளில் வாளைப் பயன்படுத்தி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபரை அடக்கியதற்காக சிங்கப்பூர் காவல்துறையின் விருதை வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் 35 வயதான அமில சிந்தனை என்ற இலங்கையரே இந்த விருதைப் பெற்றுள்ளார்.

அமில சிந்தனை சிங்கப்பூரில் விநியோக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சாமுராய் வாள் ஏந்திய நபர் ஒருவர் வீதியில் நடந்து சென்ற இலங்கையரான அமில சிந்தனையையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல்களின் விளைவாக சிந்தனவுக்கு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தன்னை சுதாகரித்துக் கொண்ட சிந்தனா அந்த நபரை தரையில் வீழ்த்தி கட்டுப்படுத்தினார்.

அன்றாட வாழ்வில், பொது நலனுக்காக அயராது உழைக்கும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது.