ராகுலை உடனே தலைவராக நியமிக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

0
497

கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக, சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் கூறுகையில், நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார்.

ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும், ராகுலை உடனடியாக, காங்கிரஸ் தலைவராக அறிவிப்பதே சிறந்த வழி. இதற்கான தீர்மானம், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என்றார்.