சசிகலா சென்னை வருவது எப்போது?- தினகரன்

0
436

பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த ஜெயலலிதாவி தோழி சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தினால், அவர் மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

தற்போது சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று அவர் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார். ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார். அதன்பிறகு சென்னைக்கு அவர் புறப்பட்டு வருகிறார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.