ஆசிரியையின் குடும்பத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று

0
415

கஹதுடுவ பிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் அடங்குவதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொல்கஸ்ஓவிட, வேதர பிரதேசத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு கடந்த 25 ஆம் திகதி கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த ஆசியரியையின் தாய், தந்தை, கணவன், சகோதரி, சகோதரர்கள் இருவர் மற்றும் 5 வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.