சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்

0
374

சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 3 நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இம், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா பெங்களூருவில் பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 3 அல்லது 5-ஆம் தேதி காரில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில், தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.