யாழ் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு(படங்கள் இணைப்பு)

0
458

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில்  காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.