சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (CPI) எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதன்படி 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகக்குறைந்த ஊழலுள்ள நா
டுகளாக 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.
அதேவேளை சிரியா,
சோமாலியா, தென் சூடான் ஆகியன முறையே 14, 12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசியாக இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்தியா கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020இல் ஆறு இடங்கள் பின்தங்கி 86ஆவது இடத்துக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.