சிறிலங்காவில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

0
434

இந்திய அரசாங்கத்தால் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா (Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 மருத்துவமனைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.