தடுப்பூசிகளை சிறிலங்கா ஜனாதிபதி பொறுப்பேற்றார்

0
383

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை சிறிலங்கா ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I – 281 விமானத்தின் மூலமாக இன்று காலை 11.35 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.