பி.சி.ஆர். பரிசோதனைகளில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

0
338

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட உள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளில் பங்கேற்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் வாரத்துக்கு ஒரு முறை பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.