மாம்பூக்களின் மருத்துவ குணங்கள்

0
594

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது மாம்பழம். எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தை போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டவை.

பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதுடன், வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகின்றன. நம் முன்னோர்கள் இந்த விஷயத்தை எல்லாம் நல்லா தெரிஞ்சி வைச்சிருந்து, அதை கடைப்பிடித்து ஆராக்கியமாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தொண்டை வலியை போக்கும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிர் போகும். இதற்கு எளிய மருத்துவம் என்ன தெரியுமா? மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து, நல்ல நீரீல் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி, அதில் எலுமிச்சம்பழத்தின் சாற்றை பிழிந்து விட வேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்து

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து மூன்று நாட்கள், மூன்று வேளை வீதம் பருகி வந்தால் வாய்ப்புண் இருந்த இடம் தெரியாமல் போகும்.

பல்வலி குணமடையும்

புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாந்தளிர், மாம்பூ இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய் கொப்பளித்து வர  பல்வலி குணமாகும்.

ஜலதோஷம் சரியாக

மாம்பூவை சேகரித்து தணலில் போட்டு அதன் புகையை தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜதோஷம் நீங்கும்.

சர்க்கரை நோய் குணமாக

மாம்பூ குறிப்பாக நீரிழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது இதனை பயனை உணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் இந்த மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக வைத்துக் கொள்ளவும். தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கடிரண்டி அளவு வெந்நீருடன் சேர்ந்து சாப்பிட்டு வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் இந்த மூன்றையும் 5 கிராம் வீதம் சேகரித்து தண்ணீர் விட்டு மை போல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 3 நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் சீதபேதி நீங்கிவிடும்.

மாம்பூக்களை சேகரித்து காய வைத்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி கஷயமாக்கி வடிகட்டி, அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் சீதபேதி நீங்கி விடும்.

மூலநோய் குணமாக

மாம்பூ, சீரகம் இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு அந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் மூலநோய் கட்டுப்படும். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கும் இந்த மருந்தை சாப்பிட குணம் தெரியும்.

குமட்டல் சரியாக

மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் குமட்டல் நீங்கும்.

கொசு தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

இந்த வைத்தியங்கள் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தது. காலப்போக்கில் இதை நாம் அறியாமல், நாகரீகம் என்ற பெயரில் பணத்தை செலவழித்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற பெயரில் தேவையற்ற மருந்துகளை வாங்கி பயன்படுத்தி பக்க விளைவுகளையும் வரவழைத்து கொள்கிறோம்.

நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற அனைத்திலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது. அதை வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் மட்டுமே நம்மவர்கள் ஒத்துக் கொள்கிறோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.