முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் அகழ்வு நடவடிக்கை! மோட்டார்குண்டுகள் மீட்பு

0
368

 

முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற மைதான துப்பரவு பணியின் போது அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக அகழ்வு நடவடிக்கையானது இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் குண்டுகள் மேலும் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அவற்றை தோண்டும் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைதீவு மாவட்ட படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கனரக இயந்திரம் மூலம் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது வெடிக்காத நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரியின் அனுமதி பெற சென்ற ஊடகவியலாளர்களுக்கு படையினர் அனுமதி மறுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.