கனடாவில் சோகத்தில் ஆழ்த்திய இருவரின் மரணம்!

0
406

 

கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜான் (85). இவர் மனைவி ஹெலன் (78). இருவருக்கும் 55 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகளும், ஐந்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை.

இந்த நிலையில் ஜான் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அவர் இறந்த அடுத்த சில நாட்களில் ஹெலனும் உயிரிழந்துள்ளார்.

குறித்த தம்பதியின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தாலும் உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக ஜான் – ஹெலன் தம்பதி வாழ்ந்து வந்ததாக அவர்களது குடும்பத்தார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.