பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிட தொகுதி ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டிடத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து தீ பரவல் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.