விவசாயிகளை ஆதரித்து, மத்திய அரசை தாக்கிப் பேசிய சீமான்

0
382

புதிய வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினார்கள்.

இந்நிலையில் விவசாயிகள் ஒரு சிலர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடியடியால் அமைதி போராட்டம் கலவரமாக மாறியது.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசு வேண்டுமென்றே விவசாயிகளை பாதிக்கும் வகையிலான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. உணர்வு மிக்க விவசாயிகளே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். விவசாயிகள் கண்ணியமாக போராடும் போதே அழைத்துப் பேசாத அரசு இப்போது விவசாயிகள் மீது குற்றம்சாட்டுகிறது. இது விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டம் என்று கூறினார்.