இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா

0
378

நான்கு ஆண்டுகால சிறை வாசத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவிடம் காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்துப் பெறுகின்றனர்.

சிறைத் துறையின் நடைமுறைகள் முடிந்ததும் காலை 10:30 மணிக்கு சசிகலா விடுதலையாக உள்ளார்.

விடுதலையானாலும், அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற உள்ளார். முழுமையாக குணமடைந்த பிறகு சசிகலா தமிழகம் வருவார் என்று கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா , கடந்த 20ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும குறிப்பிடத்தக்கது.