இன்று யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது..!

0
500

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து சேவை நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில் சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நெடுந்தூர பேருந்து நிலையம் உருவாக்கப்பட்ட்து.

இவ் விழாவில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் டக்ளஸ் தேவானந்தா,அங்கயன் இராமநாதன்,பி ஸ் எம் சாள்ஸ் ,க மகேசன் மற்றும் நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள் ,மாநகர சபை ஆணையாளர்கள் ,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் குறித்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.