நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஜூஸ்; எப்படி தயாரிப்பது?

0
383

நம்முடைய உடலானது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இது டைப் I, டைப் II நீரிழிவு என இருவகைப்படுகிறது. இதில் டைப் II நீரிழிவு பொதுவாக அதிகமானோருக்கு காணப்படுகிறது. 

இந்த வகை நீரிழிவு நோயை நமது வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றுவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.

குறிப்பாக இந்த பச்சை ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பச்சை ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காலை பானமாகும்.

தேவையான பொருட்கள்
  • கேரட் – 1
  • பச்சை ஆப்பிள் – 1/2
  • வெள்ளரி – 1
  • எலுமிச்சை – 1
  • முட்டைக்கோஸ் – 1/4
  • செலரி – 1
  • கீரை – 1/2 கட்டு
  • பீட்ரூட் – 1/2
  • பூண்டு – 3 பல்
  • தக்காளி – 1
  • இஞ்சி – 1 துண்டு
  • பாகற்காய் – 1
செய்முறை 

கேரட், ஆப்பிள், வெள்ளரி, முட்டைகோஸ், தக்காளி, செலரி, பாகற்காயை, கீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். 

இதனுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து ,மீண்டும் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும்.

நன்மைகள் 

உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயாளிகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அனைத்து வகையான நீரிழிவு நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது.

இந்த ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது பல்வேறு நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.