ஐசிசியின் சிறந்த வீரர்கள் விருது: அஸ்வின், நடராஜன் பெயர்கள் பரிந்துரை

0
416

ஐசிசியின் இந்த மாதத்துக்கான சிறந்த வீரர்கள் விருதுக்கு இந்திய அணியின் அஸ்வின், ரிஷப் பந்த், நடராஜன் மற்றும் சிராஜ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது, இந்நிலையில் ஜனவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர்கள் விருதுக்கு அஸ்வின், ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், மரிசேன் காப், நாதின் டி கிளார்க் ஆகிய தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள். பாகிஸ்தானின் நிதா தார் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இது முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் கொண்ட தனித்த ஐசிசி ஓட்டிங் அகாடமியினரும் வாக்களிப்பதை உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் ஐசிசியில் பதிவு செய்த ரசிகர்கள் ஐசிசி இணையதளம் வழியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். வெற்றி பெற்ற வீரர்கள் பெயர் ஒவ்வொரு மாதமும் 2வது திங்கட்கிழமை ஐசிசி டிஜிட்டல் சேனல்கள் மூலம் அறிவிக்கப்படும்.