சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு மனு

0
345

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் நாளை அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்.

சசிகலா தற்போது கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் இருப்பினும் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை தகவல் கூறுகின்றன.

இந்த நிலையில் சசிகலாவின் பாதுகாப்பை கருதி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவரது வழக்கறிஞர் ராஜராஜன் அவர்கள் மத்திய உள்துறை செயலகத்திற்கு அனுப்பி உள்ளார்.