டெல்லி காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த வைகோ

0
355

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளிக்கிறது. இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

வைகோ வெளியிட்டுள்ள செய்தியில், “டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. மக்கள் கூட்டம் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கருதினால் விபரீத முடிவே ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.