டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு

0
377

டெல்லியில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். தற்போது நிலைமை கைமீறிப் போன நிலையில் போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கிய விவசாயிகள் டெல்லி முழுவதும் பேரணியாக சென்று டெல்லி செங்கோட்டையின் உச்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய கொடியை ஏற்றினர்.

விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அங்குள்ள விவசாயிகள் அவர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்ததாக குற்றம் சாட்டும் நிலையில் டெல்லி காவல்துறை, விவசாயிகளின் டிராக்டர் மோதி தான் அவர் உயிரிழந்தார் என விளக்கம் கொடுத்துள்ளது.