சிறிலங்காவுக்கு வரும் 5 இலட்சம் இந்திய கொரோனா தடுப்பூசிகள்

0
394

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 க்கும் மேற்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை சிறிலங்காவுக்கு வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தடுப்பூசி தொகுப்பானது நாளை மறுதினம் நாட்டைசிறிலங்காவை வந்தடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவையும், கடந்த ஆண்டு கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு, 500,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி வழங்குவது தொடர்பான அடிப்படை ஒத்திகை தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வர இருக்கும் தடுப்பூசி தொகுப்பில், முதலாவது கட்டம் கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு பங்களிக்கின்ற முன்னணி உறுப்பினர்களுக்கு இதனை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.