பூங்காவை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்

0
665

பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் மென்மையான கடனை முன்கூட்டியே திருப்பித் தருமாறு பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.

இஸ்லாமாபாத் அதன் தற்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை விரைவாக அனுப்பி பதற்றங்களை தணிக்க முயன்றது. இருப்பினும், சவூதி அரேபியா தனது கோரிக்கையில் இருந்து மாறவில்லை.

பாகிஸ்தா அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, தலைநகர் இஸ்லாமாபாத்தில், 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள எப் 9 (F-9) பூங்காவை பிரதமர் இம்ரான் கான் அடமானம் வைத்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் செவ்வாய் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் இருந்து பாகிஸ்தான் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ளது என்பது தெளிவாகிறது.