மூதூர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
580

திருகோணமலை – மூதூர் 64 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீமெந்து ஏற்றி வந்த லொறி ஒன்று மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று பிற்பகல் (25) இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.