லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறி இடம்பெற்ற திருமணம்; பொலிஸார் அதிரடி!

0
435

லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக திருமண உரிமையாளர்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் திருமண விழாவில் 400 பேருக்கும் மேல் கலந்து கொண்டதால் கொரோனா ஊரடங்கை மீறலுக்காக பொலிசார் அந்த தம்பதினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.

இங்கிலாந்து தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில், எகெர்டன் சாலையில் உள்ள யேசோடே ஹடோரா பள்ளிக்குள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்டு பொலிஸார் இந்த அபராத்தை விதித்துள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் பொலிஸார் கண்டுபிடித்த மிகப்பெரிய கட்டுப்பாடுகளை இது மீறுகிறது என்று ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை லண்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அங்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.